School Morning Prayer Activities - 16.10.2023

naveen

Moderator




பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 16.10.2023



திருக்குறள் :



பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : கூடா ஒழுக்கம்

குறள் :278



மனத்தது மாசாக மாண்டார் நீராடி

மறைந்தொழுகு மாந்தர் பலர்.



விளக்கம்:



நீருக்குள் மூழ்கியோர் தம்மை மறைத்துக் கொள்வது போல, மாண்புடையோர் எனும் பெயருக்குள் தம்மை மறைத்துக்கொண்டு மனத்தில் மாசுடையோர் பலர் உலவுகின்றனர்.



பழமொழி :

The double charge will break even a cannon



அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.



இரண்டொழுக்க பண்புகள் :



1. ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே எனது செயல்களை ஊக்கமுடன் செய்வேன்.



2. முயன்றால் பட்டாம்பூச்சி முயலாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் முயற்சி செய்வேன்.



பொன்மொழி :



உலகின் முதல் மருந்து சுத்தமான தண்ணீரே. -- செக்கோஸ்லோவேக்கியா நாட்டு பொன்மொழி



பொது அறிவு :



1. அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் எது?



விடை: ஐரோப்பா



2. உலகிலேயே மிகப் பெரிய நூலகம் எங்கு உள்ளது?



விடை: வாஷிங்டன் D.C. (அமெரிக்கா)



English words & meanings :



fusion - the process or result of joining two or more things, இணைவு spark-a small fiery particle from a fire, தீப்பொறி

ஆரோக்ய வாழ்வு :



சங்குப்பூ: தலை நோய், கண் நோய்கள், மந்தம் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தும். சங்குப்பூ மலர்ச்சாறு, கல்லீரலை பலப்படுத்தும். தேமல் மற்றும் கரும்புள்ளிகளைக் குணமாக்கும்



அக்டோபர் 16 இன்று



உலக உணவு நாள் (World Food Day)




உலக உணவு நாள் (World Food Day) ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 1945 ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூர ஐநா இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது. நவம்பர் 1979 ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் 20வது பொது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் பால் ரொமானி என்பவரின் முன்முயற்சியினால் இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது 150ற்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.



2008 ஆம் ஆண்டிற்கான உலக உணவு நாளின் கருப்பொருள் "உலக உணவுப் பாதுகாப்பு: காலநிலை மாற்றம் மற்றும் உயிரியல் ஆற்றலுக்கான சவால்கள்" என்பதாகும்.



நீதிக்கதை



The Monkeys And The Bell –




மணி அடித்த குரங்குகள் :- ஒரு காட்டு பகுதிக்கு பக்கத்துல இருக்குற ஒரு கிராமத்துல ஒரு திருடன் இருந்தான்.



அந்த திருடன் எத பார்த்தாலும் திருடிட்டு போயி காட்டுக்கு அடுத்து இருக்குற ஊருல வித்து வாழ்க்கை நடத்திக்கிட்டு இருந்தான்.



ஒரு நாள் அவன் கோவில் பக்கம் போனான் . அப்ப மணி அடிக்கிற சத்தம் கேட்டுச்சு அவனுக்கு உடனே கோவிலுக்கு போனான் அந்த திருடன்.



அங்க ஒரு பெரிய மணி தொங்கிகிட்டு இருக்குறத பார்த்தான் . அடடா இந்த மணிய திருடி வித்தா ஒரு வாரம் நாம திருட போக வேணாம்னு நினைச்ச அந்த திருடன் அந்த மணிய திருடிட்டு காட்டுவழியா அடுத்த ஊருக்கு நடந்து போக ஆரம்பிச்சான்.



அவன் நடக்க நடக்க அந்த மணி டிங் டாங்குனு சத்தம் கொடுக்க ஆரம்பிச்சுச்சு,அந்த மணியோட சத்தம் காட்டுக்குள்ள ஒரு தூங்கிட்டிருந்த ஒரு புலியோட தூக்கத்த கெடுத்துச்சு.



யாரு மணி அடிச்சு தன்னை எழுப்பிவிட்டானு ரொம்ப கோபத்தோட பார்த்துச்சு அந்த புலி.



புலிய பார்த்ததும் அந்த திருடன் ரொம்ப பயந்து போனான் ,அந்த புலி அவன ஒரு அடி அடிச்சது.



உடனே அந்த திருடனுக்கு ஒரே ரெத்தமா வந்துச்சு ,இந்த மணிய தூக்கிகிட்டு இந்த புலிகிட்ட இருந்து தப்பிக்க முடியாதுனு அந்த மணிய அங்கேயே போட்டுட்டு வேகமா ஓட ஆரம்பிச்சான் திருடன்.



அந்த புலியும் அவன தொரத்திக்கிட்டே போக ஆரம்பிச்சுச்சு அப்பதான் ஒரு குரங்கு கூட்டம் அந்த பக்கமா வந்துச்சுங்க.



அந்த குரங்கு கூட்டம் அந்த மணிய பார்த்ததும் அத எடுத்து அடிச்சி சத்தம் வர வச்சு பாத்துச்சுங்க.



அந்த மணி எழுப்புனா டிங் டாங் சத்தம் கேட்டதும் அந்த குரங்குகளுக்கு ரொம்ப பிடிச்சி போச்சு.



அதனால அதுங்க எல்லாம் ஒண்ணா சேர்ந்து அந்த மணிய எடுத்துக்கிட்டு தாங்க வாழுற பெரிய மரத்துக்கு போச்சுங்க.



அந்த மரம் ஊருக்கு பக்கத்துல இருக்குற காட்டு பகுதியில இருந்ததால , ஒவ்வொரு தடவ அந்த மணிய அடிக்கும் போதும் அது ஊர்காரங்களுக்கு கேட்டுச்சு.



திடீர்னு காட்டுக்குள்ள இருந்து மணி சத்தம் தொடர்ந்து கேட்டதால, ஊர்மக்கள் எல்லாம் ரொம்ப பயந்து போனாங்க.



இரவு பகல்னு தொடர்ந்து மணி சத்தம் கேட்டதால, ஊர்மக்கள் அந்த நாட்ட ஆண்ட ராஜாகிட்ட போயி சொன்னாங்க.



அந்த ராஜா சொன்னாரு இந்த பிரச்சனைக்கு யார் காரணம்னு கண்டுபிடிச்சி ,அந்த மணி சத்தத்தை நிறுத்துறவங்களுக்கு நிறய பரிசு கொடுக்குறேனு எல்லாருகிட்டயும் சொன்னாரு.



இத கேட்ட ஒரு பாட்டி தைரியத்தோட காட்டுக்குள்ள போனாங்க ,அங்க குரங்குகள் மணிய வச்சு விளையாண்டுக்கிட்டு இருந்தத பார்த்தாங்க.



அடடா இது , குரங்குகளோட வேலையானு சொன்ன அந்த பாட்டி ,அந்த மணிய குரங்குங்க கிட்ட இருந்து எப்படி பிடுங்குறதுனு ஒரு திட்டம் போட்டாங்க.



உடனே நேரா சந்தைக்கு போயி நிறைய பழங்கள் காய் கறிகள் எல்லாம் வாங்கி ஒரு கூடையில் போட்டு எடுத்துக்கிட்டு திரும்ப அந்த காட்டுக்கு போனாங்க.



காட்டுக்கு போன அந்த பாட்டி குரங்குகளுக்கு தெரியிற மாதிரி அந்த கூடைய வச்சிட்டு தூங்குறமாதிரி நடிக்க ஆரம்பிச்சாங்க



அந்த கூடைய பார்த்த குரங்குகள் மெதுவா மரத்துல இருந்து ஒவ்வொண்ணா இறங்கி வந்து பார்த்துச்சுங்க.



மெதுவா ஒவ்வொரு குரங்கா அந்த கூடையில் இருந்த பழங்களையும் காய்கறிகளையும் எடுத்து திங்க ஆரம்பிச்சுச்சுங்க



அப்ப மணி வச்சிருந்த குரங்கும் மெதுவா கீழ இறங்கி வந்துச்சு , கீழ வந்த அந்த குரங்கு மணிய கீழ போட்டுட்டு ஒரு பழத்தை எடுத்து திங்க ஆரம்பிச்சுச்சு



இத எல்லாம் ஒர காண்ணால பார்த்துகிட்டு இருந்த அந்த பாட்டி டக்குனு அந்த மணிய எடுத்துகிட்டாங்க



மணிய எடுத்த பாட்டி நேரா அரசர்கிட்ட போயி நடந்தது எல்லாம் சொன்னாங்க , தைரியத்தோடவும் புத்திசாலித்தனத்தோடவும் மணிய எடுத்துட்டு வந்து பிரச்னையை தீர்த்த அந்த. பாட்டிக்கு நிறைய பரிசு கொடுத்தாரு அந்த ராஜா. நீதி: துணிவுடன் செயல்படுவோம்.வெற்றியினை பெறுவோம்.



இன்றைய செய்திகள் - 16.10.2023



*தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை கனமழைக்கு வாய்ப்பு.



*அமெரிக்காவில் அம்பேத்கரின் 19 அடி உயர சிலை திறப்பு.



* அண்ணா பல்கலைக்கழகத்தில் அப்துல் கலாம் முழு உருவச் சிலை: முதலமைச்சர் திறந்து வைத்தார்.



* அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு மராத்தான் போட்டிகள்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் தொடங்கி வைத்தார்.



* உலகக் கோப்பை கிரிக்கெட்- இலங்கை கேப்டன் தசுன் ஷனகா காயத்தால் விலகல்.



* பாகிஸ்தானை பந்தாடிய இந்தியா: பந்துவீச்சாளர்களை பாராட்டிய ரோகித் சர்மா.





Today's Headlines



* Heavy rain is likely in 14 districts of Tamil Nadu today and tomorrow.



*19-feet-tall statue of Ambedkar inaugurated in USA.



* Full-length statue of Abdul Kalam at Anna University: Chief Minister inaugurates.



* Marathon competitions on Abdul Kalam's birthday: ISRO chief Somnath inaugurated.



* Cricket World Cup- Sri Lanka captain Dasun Shanaka withdraws due to injury.



* India beat Pakistan: Rohit Sharma praised the bowlers.

Prepared by



Covai women ICT_போதிமரம்
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock