மயிலாடுதுறை பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை கனமழை பெய்து வருவதால் மயிலாடுதுறை மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது . நாளைய தினம் கடலூர் , மயிலாடுதுறை , நாகை , தஞ்சை , திருவாரூர் , புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது . இதனால் , மேலும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது .