9-ஆம் வகுப்பு மாணவர்கள் ஊரகத் திறனாய்வு தேர்வுக்கு நவ.24-க்குள் விண்ணப்பிக்கலாம்!!

naveen

Moderator

ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் உதவித் தொகை பெறுவதற்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வு வரும் டிச.16-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில்,
அந்தத் தேர்வுக்கு நவ.24 வரை விண்ணப்பிக்கலாம் என
தெரிவிக்கப்பட் டுள்ளது.

இது தொடர்பாக தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா,
அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக் கும் (சென்னை தவிர) அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிப்பதற்காக ஊரகத் திறனாய்வுத் தேர்வு திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த தேர்வை ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு அங்கீகா ரம் பெற்ற பள்ளிகளில்
9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் எழுதலாம். அவர்களது பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அந்த வகையில் நிக ழாண்டுக்கான ஊரகத் திறனாய்வுத் தேர்வு டிசம்பர் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்த தேர்வெழுத விரும்பும் மாண வர்கள், தங்கள் பள்ளி தலைமையாசிரியர்கள் வாயிலாக நவம் பர் 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இதற்கான விண்ணப்பப் படிவங்களை என்ற இணையதளத்தில் நவம்பர் 14-ஆம் தேதி முதல் பதிM றக்கம் செய்து கொள்ளலாம்.
இதற்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ.10 மட்டும் செலுத்த வேண்டும். மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப் பங்களை தலைமையாசிரியர்கள் தேர்வுத் துறை இணையதளத் தில் நவம்பர் 17 முதல் 28-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன்பின் மாணவர்களின் விண்ணப்பங்கள் மற் றும் தொகுப்பறிக்கையை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவல கங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock