முதுநிலை படிப்புக்கான கல்வி உதவித்தொகை பெற விரும்புபவர்கள் நவம்பர் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் (ஏஐசிடிஇ) வெளியிட்ட அறிவிப்பு: ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் கேட் அல்லது சிஇஇடி நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி, பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடவியல் ஆகியபடிப்புகளில் நடப்பு கல்வியாண்டில் (2023-24) சேர்க்கை பெற்ற முதுநிலை மாணவர்கள், உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். தகுதி பெறும் மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.12,400 உதவித் தொகையாக வழங்கப்படும்.
அதேநேரத்தில், முதுநிலை படிப்பை பகுதிநேரம், தொலைதூர அடிப்படையில் படிப்பவர்கள் உதவித்தொகை பெற முடியாது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. கல்வி உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் என்ற வலைதளம் வழியாக நவ.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், மாணவர்களின் விண்ணப்பங்களை அந்தந்த கல்வி நிறுவனங்கள் டிச.15-க்குள் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும். கூடுதல் விவரங்களை என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.