மாணவர்களுக்கு ‘இளம் கவிஞர் விருது’ - மாவட்ட அளவில் நவம்பர் 23-ம் தேதி நடைபெறுகிறது

naveen

Moderator


பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி, முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:

தமிழக அரசின் அறிவிப்புபடி, 2022-23-ம் கல்வியாண்டு முதல் மகாகவி பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு கவிதைப் போட்டிகள் நடத்தி சிறந்த படைப்புகளைத் தேர்வு செய்து ‘இளம் கவிஞர் விருது’ மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசுப் பள்ளிகளில் 10, 11, 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஒன்றியளவில் கவிதைப் போட்டிகள் நடத்தி, அதில் சிறந்ததலா 3 மாணவ, மாணவிகளை தேர்வு செய்ய வேண்டும்.



அவர்களுக்கு மாவட்ட அளவிலான கவிதை போட்டிகள் நவம்பர் 23-ம் தேதி நடத்தப்படும். அதில் சிறந்த ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவியை தேர்ந்தெடுக்க வேண்டும். தொடர்ந்து மாவட்ட அளவில் தேர்வான மாணவர்களுக்கு மாநில அளவிலான கவிதைப் போட்டிகள் சென்னையில் நவம்பர் 30-ம் தேதி நடைபெறும். அதில் மாநில அளவில் ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவி தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு மகாகவி நினைவு தினத்தன்று இளம் கவிஞர் விருது வழங்கி கவுரவிக்கப்படும்.
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock