மாணவர்களுக்கு ரூ.15 லட்சம் மதிப்புள்ள உதவித்தொகை

naveen

Moderator



மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை அறிவித்துள்ளது.



இதுதொடர்பாக கல்கி கிருஷ்ணமுர்த்தி நினைவு அறக்கட்டளையின் அறங்காவலர் எஸ். சந்திரமவுலி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

எழுத்தாளர் அமரர் கல்கியின் பெயரில் இயங்கி வரும் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை ஆண்டுதோறும் மாணவ, மாணவிகளுக்கு கல்விஉதவித்தொகை வழங்கி வருகிறது.



அந்த வகையில் 2023-2024-ம் கல்வியாண்டில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள உதவித்தொகை மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவத்தை என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை மாதம் 31-ம் தேதி ஆகும்.
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock