புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஒரு போதும் ஏற்காது என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டமாக கூறியுள்ளார். திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றின் பிறகு அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அன்பில் மகேஷ், திமுக காரனாக புதிய கல்விக் கொள்கையை தொடக்கம் முதலே எதிர்த்து வருவதாக கூறினார். மேலும் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று மத்திய அமைச்சரிடமே தாம் தெரிவித்துவிட்டதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
இவை தவிர மாநிலத்துக்கென ஒரு கமிட்டி உருவாக்கப்படும். மாநில அரசுக்கு தரவேண்டிய மூன்றாவது தவணை நான்காவது தவணை 1800 கோடி மட்டுமல்ல அடுத்த ஆண்டு தரவேண்டிய 3 ஆயிரத்து 800 கோடி ரூபாயையும் மத்திய அரசு, இதில் தொடர்பு படுத்துகின்றனர் என்றார்.