பிப்ரவரி 15 - ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் - கேள்வியும் விளக்கமும்

naveen

Moderator
பிப்ரவரி 15 - ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் - கேள்வியும் விளக்கமும்



பிப்ரவரி 15 - போராட்டத்தில் போராட்டத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர் / ஆசிரியர் / அரசுப் பணியாளர்கள் - தற்செயல் விடுப்பு எடுத்து பங்கேற்க வேண்டுமா.? அல்லது பிறவகை விடுப்பு எடுத்து பங்கேற்க வேண்டுமா.? அல்லது விடுப்புக் கடிதம் வழங்க வேண்டுமா.? தகவல் தெரிவிக்க வேண்டுமா.?



விளக்கம்



தோழர்களே.!



பிப்ரவரி 15 அன்று நாம் நடத்துவது - அடையாள வேலை நிறுத்தம், எனில்,



எவ்வித விடுப்புக் கடிதமும் அளிக்கத் தேவையில்லை



யாரிடம் எவ்வித அனுமதியும் பெற வேண்டிய அவசியம் இல்லை



பிப்ரவரி 15 - அன்று அலுவலகம் செல்லாமல் / பள்ளி செல்லாமல் - இருக்க வேண்டும். மேலும், அலுவலகம் அல்லது பள்ளியில் இருந்து அலுவலர் அல்லது தலைமையாசிரியர் அல்லது கண்காணிப்பாளர் யாரேனும் தகவல் கோரினால், நான் வேலை நிறுத்தத்தில் பங்கு பெற்றுள்ளேன் எனத் தெரிவித்தால் போதுமானது.



நமது கோரிக்கைக்காக, நாம் வேலை நிறுத்தம் செய்வது - நமது உரிமை. அதனால், அனுமதி கேட்க வேண்டிய அவசியம் இல்லை



பிப்ரவரி 15 அன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கும்

அனைவரும் பங்கேற்று, வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்குவோம்.
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock