நீட் தேர்வு தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக நிர்ணயம்: தனியார் கல்லூாிகளில் காலி இடங்களால் அறிவிப்பு

naveen

Moderator



தனியார் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைத்து நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



நாடுமுழுவதும் எம்டி, எம்எஸ், டிப்ளமோ மற்றும் எம்டிஎஸ் ஆகிய மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கான இடங்களில், 2023-24 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மார்ச் 5-ல் நடந்தது. முடிவுகள் மார்ச் 14-ம்தேதி வெளியிடப்பட்டது. 800 மதிப்பெண்களுக்கு நடைபெற்ற நீட் தேர்வில் கட்-ஆப் மதிப்பெண்ணாக பொதுப் பிரிவினர், பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப் பிரிவினருக்கு (இடபிள்யூஎஸ்) 291மதிப்பெண்ணும், பொதுப் பிரிவினரில் மாற்றுத் திறனாளிகளுக்கு 274 மதிப்பெண்ணும் ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு (மாற்றுத் திறனாளிகள் உட்பட) 257 மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டது.



இதையடுத்து, மத்திய அரசு இடங்களுக்கு என்ற இணையதளத்தில் கடந்த ஜூலை 27-ம் தேதி கலந்தாய்வு தொடங்கியது. 3 சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. மூன்றாம் சுற்று முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.



இரண்டு சுற்று நிறைவு: தமிழகத்தில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு போக அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள 50சதவீத இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள் மற்றும்நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்தும் மாநில கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் 7-ம் தேதி தொடங்கியது. இரண்டு சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது.



இந்நிலையில், முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு அதிக இடங்கள் காலியாக உள்ளதால், அவற்றை நிரப்புவதற்காக நீட் தகுதி மதிப்பெண்ணை பூஜ்ஜியமாக மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.



இதுதொடர்பாக தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மு.அகிலன் கூறியதாவது:



அகில இந்திய அளவில் நடந்த மூன்று சுற்று, தமிழகத்தில் நடந்த இரண்டு சுற்று கலந்தாய்வில் பெரும்பாலான அரசு இடங்கள் நிரம்பிவிட்டன. தனியார் கல்லூரிகளில் இடங்கள் நிரம்பவில்லை.



மாநில அரசுக்கு அனுமதி: தற்போது நீட் தேர்வு தகுதி மதிப்பெண்ணை பூஜ்ஜியம் என்று அறிவித்துள்ளதால் தனியாரில் காலியாகவுள்ள அனைத்து இடங்களையும் நிரப்பலாம். இதற்கு ஏன் நீட் தேர்வு நடத்த வேண்டும். இதைவிட தமிழக அரசு ஏற்கெனவே முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நடத்திய தேர்வு சிறந்த ஒன்றாக இருந்தது.



அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு வேண்டுமென்றால் மத்திய அரசு நீட் தேர்வு நடத்திக்கொள்ளட்டும். தமிழக இடங்களுக்கு மாநில அரசே தேர்வு நடத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock