தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு: 2.20 லட்சம் மாணவர்கள் எழுதினர்

naveen

Moderator



கல்வி உதவித் தொகைக்கான தமிழ் மொழி இலக்கியத் திறனாய்வு தேர்வை 2.20 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.



தமிழகத்தில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து வகையான பள்ளிகளிலும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உட்பட) பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு கடந்தாண்டு முதல் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களில் 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் ரூ.1,500 வீதம் 2 ஆண்டுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். தமிழக தேர்வுத்துறை சார்பில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது.



அதன்படி நடப்பாண்டுக்கான திறனாய்வுத் தேர்வு மாநிலம் முழுவதும் நேற்று நடைபெற்றது. இந்த தேர்வெழுத மொத்தம் 2 லட்சத்து 36,910 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்தனர். அவற்றில் 2 லட்சத்து 20,880 பேர் தேர்வில் கலந்து கொண்டனர். தேர்வு வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள், ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் முடிவுகள் வரும் நவம்பர் மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock