தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் 20.08.2023 அன்று திருச்சியில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி ஆசிரியர் நலன் , மாணவர் நலன் , கல்வி நலன் , சமூக நலன் சார்ந்த கீழ்க்கண்ட 30 கோரிக்கைகளை வலியுறுத்தி 29.09.2023 அன்று காலை 11 மணிக்கு பத்தாயிரம் ஆசிரியர்கள் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பிருந்து தலைமைச் செயலகத்திற்கு பேரணியாக சென்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடம் கோரிக்கை மனு அளித்து கோரிக்கைகளை நிறைவேற்றித்தர கொள்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அப்பேரணியில் ஆசிரியர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை வெற்றிபெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
அப்பேரணியில் ஆசிரியர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை வெற்றிபெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.