கல்வி உதவிக்கான முதல்வரின் திறனாய்வு தேர்வு: இயக்குநர் அறிவுறுத்தல்

naveen

Moderator



முதல்வரின் திறனாய்வுத் தேர்வு குறித்து தேர்வுத் துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.



அதில், அரசு பள்ளிகளில் பிளஸ் 1 படிக்கும் மாணவர்களுக்காக செப்.23-ல் ‘தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு’ நடக்கிறது. இதில் 1000 மாணவர்களை தேர்வு செய்து அவர்களின் இளநிலை படிப்பு வரை மாதம் ரூ.1,000 உதவித் தொகை தரப்படும். இதற்கான விண்ணப்ப விவரங்களை தளத்தில் தலைமை ஆசிரியர்கள் ஆக.25-க்குள் பதிவிட வேண்டும். கட்டணம் செலுத்திய பின் பதிவுகளைமாற்ற இயலாது என கூறியுள்ளார்.
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock