கல்வித்துறை உத்தரவு காற்றில் பறந்தது

naveen

Moderator
விஜயதசமி அன்று பள்ளிகளை திறக்கும்படி தெரிவித்த கல்வித்துறையின் உத்தரவு காற்றில் பறந்தது.



விஜயதசமி நாளன்று பலரும் தங்கள் குழந்தைகளுக்கு கற்பித்தலை துவக்க விரும்புவர். எனவே விஜயதசமி நாளான நேற்றுமுன்தினம் துவக்க, நடுநிலைப்பள்ளிகளை திறந்து மாணவர் சேர்க்கையை நடத்தும்படி கல்வித்துறை அறிவித்தது.



முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் இதற்காக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பித்தனர்.



அன்னூர் வட்டாரத்தில், 75 துவக்கப் பள்ளிகளும், 16 நடுநிலைப் பள்ளிகளும் உள்ளன. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்கிற நோக்கில் கல்வித் துறை உயர் அதிகாரிகள் விஜயதசமியன்று மாணவர் சேர்க்கையை நடத்த அறிவுறுத்தினர்.



எனினும் நேற்றுமுன்தினம் அன்னூர் வட்டாரத்தில் பல பள்ளிகள் திறக்கப்படவில்லை. விடுமுறை நாள் என்பதாலும் பலரும் தங்கள் வீடுகள் அலுவலகங்கள் தொழிற்சாலைகளில் வழிபாடு செய்வார்கள் என்பதாலும் திறக்கப்படவில்லை. கல்வித்துறை அதிகாரிகளின் உத்தரவு நேற்றுமுன்தினம் காற்றில் பறந்தது. வட்டார கல்வி அலுவலகமும் நேற்றுமுன்தினம் காலை திறக்கப்படவில்லை.



இதுகுறித்து வட்டார கல்வி அலுவலர் தர்மராஜிடம் கேட்டபோது, விஜயதசமியன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர் சேர்க்கை நடந்தது. எவ்வளவு மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்கிற விவரம் விரைவில் தருகிறேன், என்றார்.
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock