தமிழக அரசு வழங்கும் அப்துல் கலாம் விருதுக்கு தகுதியானவர்கள், வரும் 30ம் தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.
இது குறித்து, தமிழக உயர்கல்வி துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:
விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல், மாணவர்கள் நலன் போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் தமிழகத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு, ஆண்டுதோறும் அரசின் சார்பில் அப்துல் கலாம் விருது வழங்கப்படும்.
சுதந்திர தின விழாவின் போது, விருதுடன், 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, 8 கிராம் தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
இந்த விருதுக்கு தகுதியானவர்கள், தங்கள் விபரங்கள் மற்றும் உரிய ஆவணங்களுடன், வரும் 30ம் தேதிக்குள் 'ஆன்லைன்' வழியே விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களை, என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழக உயர்கல்வி துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு:
விஞ்ஞான வளர்ச்சி, மனிதவியல், மாணவர்கள் நலன் போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் தமிழகத்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு, ஆண்டுதோறும் அரசின் சார்பில் அப்துல் கலாம் விருது வழங்கப்படும்.
சுதந்திர தின விழாவின் போது, விருதுடன், 5 லட்சம் ரூபாய்க்கான காசோலை, 8 கிராம் தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
இந்த விருதுக்கு தகுதியானவர்கள், தங்கள் விபரங்கள் மற்றும் உரிய ஆவணங்களுடன், வரும் 30ம் தேதிக்குள் 'ஆன்லைன்' வழியே விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களை, என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.