இன்று கடைசி நாள்...ஆதிதிராவிடர் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணிக்கு ஆசிரியர்கள் தேர்வு!!

naveen

Moderator
அரியலூர் ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணிக்கு ஆள் தேர்வு
விண்ணப்பிக்க கலெக்டர் ஆனிமேரி சொர்ணா அழைப்பு
அரியலூர்,
அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ரூ.12 ஆயிரம் ஊதியத்தில் தற்காலிகமாக பள்ளி மேலான்மைக்குழுவின் மூலம் நிரப்படவுள்ள மேற்கண்ட பணியிடத்துக்கு கீழ்காணும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும். இடைநிலை ஆசிரியர்கள் வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்று இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலராக பணிபுரிந்து வருபவர்கள் (இல்லையெனில்). வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி, இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் பட்டியலினத்தவர்களுக்கு முன்னுரிமை. பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.


கீழ்காணும் பகுதியிலுள்ள அரசு ஆரம்ப தொடக்கப் பள்ளிகளில் காலிப்பணியிட விவரம்:
தா.பழூர்-1, மணக்கால்-2, விளந்தை-1, ஜெயங்கொண்டம்-1, த.கீழவெளி-1, இளையபெருமாள் நல்லூர்-2, வடவீக்கம்-1, வெத்தியார்வெட்டு-2, பாப்பாகுடி-1, கங்கை கொண்டசோழபுரம்-1, கொல்லாபுரம்-1, இளந்தைக்கூடம்-1, தூத்தூர்-1, கீழகொளத்தூர்-1, பூவாணிப்பட்டு-2.
தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் காலிப்பணியிட விவரம்: இலைக்கடம்பூர்-1, ஜெயங்கொண்டம்-1, வடவீக்கம்-1. விண்ணப்பங்கள் அரியலூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில்
நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 29.9.2023 மாலை 5 மணிக்குள் ஒப்படைக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock