இந்த செய்திக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது - தினமலர் நாளிதழ்

naveen

Moderator



அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு அமல்படுத்தியுள்ள முன்னோடி திட்டமான காலை உணவுத்திட்டம் குறித்து , ஈரோடு - சேலம் ' ' தினமலர் ' பதிப்பில் இன்று ( ஆக . , 31 ) வெளியாகியிருக்கும் மிக அருவருக்கத்தக்க , வெட்கித் தலைகுனியக்கூடிய வகையிலான செய்திக்கும் , கி . ராமசுப்பு அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியாகி வரும் சென்னை , மதுரை , கோவை , புதுவை , நெல்லை , நாகர்கோவில் பதிப்புகளுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.



ஈரோடு- சேலம் தினமலர் பதிப்பானது , திரு.சத்தியமூர்த்தி என்பவரை உரிமைதாரர் , வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியராகக் கொண்டு கடந்த , 23 ஆண்டுகளாக தனித்து இயங்கி வருகிறது.பள்ளி மாணவர்களுக்கான திட்டத்தின் உன்னத நோக்கத்தை புரிந்துகொள்ளாமல் , மிகக் கீழ்த்தரமான பார்வையுடன் செய்தி வெளியிட்டிருக்கும் ஈரோடு - சேலம் தினமலர் பதிப்பினையும் , அதற்கு காரணமான நபர்களையும் வன்மையாக கண்டிக்கிறோம் . லட்சோப லட்சம் வாசகர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையினைப் பெற்றிருக்கும் ' தினமலர் ' பெயரிலேயே இப்படியொரு தரம்தாழ்ந்த செய்தியினை வெளியிட்டு , தினமலர் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியிருக்கும் ஈரோடு சேலம் பதிப்பின் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.



ஆசிரியர் ,

தினமலர் . சென்னை , மதுரை , கோவை , புதுவை , நெல்லை , நாகர்கோவில் பதிப்புகள் .
 
Top
AdBlock Detected

We get it, advertisements are annoying!

Sure, ad-blocking software does a great job at blocking ads, but it also blocks useful features of our website. For the best site experience please disable your AdBlocker.

I've Disabled AdBlock