கும்மிடிப்பூண்டி அருகே எருக்குவாய் கிராமத்தில் வசிக்கும் இருளர் இன மக்கள், மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.அந்த கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் ஒன்றிணைந்து, இவர்களுக்கு உதவ முடிவு செய்தனர். தலைமை ஆசிரியர் சண்முகம் ஆலோசனையின்படி, திரட்டிய நிதியில், அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை வாங்கினர்.ஆசிரியர்கள் அனைவரும் நேரில் சென்று, 35 இருளர் இன குடும்பத்தினர் மற்றும் ஊராட்சி துாய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள், காய்கறிகளை நிவாரண பொருட்களாக வழங்கினர்.